Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012,00:59 IST
கருத்துகள் (19)
சென்னை: மாநிலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தால், அதைப் பற்றியும், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் பற்றியும், சில தினங்களுக்கு விவாதிப்பது; காலையில் இருந்து இரவு வரை, ஓயாமல் தொடர் கூட்டம் நடத்துவது; சுற்றறிக்கை அனுப்புவது; இறுதியில், "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிப்பது என்பதே, அரசு நிர்வாகங்களின் செயல்பாடாக இருந்து வருகிறது. சம்பவம் ஒன்று: கடந்த 2004ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி நடந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில், 90 குழந்தைகள் துடி துடித்துச் சாம்பலாகினர். இந்த சம்பவம் நடந்ததும், கூரை, கொட்டகையில் இயங்கி வந்த பள்ளிகள் மீது, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்தனர் அதிகாரிகள். ஆனால், மொட்டை மாடிகளில் எல்லாம் தனியார் பள்ளிகள் இயங்க அனுமதி கொடுத்த அதிகாரிகளும், உயர் அதிகாரிகளே அனுமதி கொடுத்ததால் நமக்கேன் வம்பு என, எதிர்ப்பு தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாமல், மவுன குருவாக இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதோ, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து, பிற்காலத்தில் இதுபோன்ற எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, நீதிபதி சம்பத் கமிட்டியை நியமித்து, அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. நீதிபதி சம்பத்தும், அரசுப் பள்ளிகள் உட்பட எந்தப் பள்ளிகளிலும், கூரைகள், ஓலைகள் வேயப்பட்ட வகுப்பறைகள் இருக்கக் கூடாது என்பது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய, 600 பக்க அறிக்கையை, அரசுக்கு சமர்ப்பித்தார்.
தொடரும் விதிமீறல்கள்: ஆனால், இப்போதும் தனியார் பள்ளிகளில் பல விதிமீறல்கள் இருக்கத் தான் செய்கின்றன. விளையாட்டு மைதானங்கள் இல்லாமலும், குறுகிய இடங்களிலும், போதிய இட வசதி இல்லாமலும் பல பள்ளிகள் இயங்கத்தான் செய்கின்றன. இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், பழைய பள்ளிகள் என காரணம் காட்டி, இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு தரவும், முயற்சிகள் நடந்து வருகிறது.
சம்பவம் இரண்டு: சில ஆண்டுகளுக்கு முன், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகில், தனியார் பள்ளி வேன் டிரைவர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே வேனை ஓட்டியதில், நிலை தடுமாறி சாலையோர குளத்தில் கவிழ்ந்ததால், ஒரு ஆசிரியை மற்றும் பள்ளி சிறுவர்கள் என, மொத்தம், 16 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் நடந்த சில தினங்கள் வரை, வழக்கம்போல், அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கண்டிப்பு நடவடிக்கை, பள்ளி வேன்களில் போலீசார் சோதனை, அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை போன்ற காட்சிகள் அரங்கேறின.
நடவடிக்கை இல்லை: இதுபோல், அவ்வப்போது பல விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கனவே நடந்த சம்பவங்கள் தொடர்பாக, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா என்பது தான் முக்கியக்

Advertisement
கேள்வி. இவை இரண்டும் இடைவிடாமல் தொடர்ந்து நடந்திருந்தால், குழந்தை சுருதியின் உயிர் பறிபோயிருக்காது. ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால், கூப்பாடு போடுவது, அதன்பின் சுத்தமாக மறந்துவிடுவது போன்ற போக்கு தொடரும் வரை, இதுபோன்ற துயரங்கள் தொடரத்தான் செய்யும்.
ஒரு முறை கூட்டம் போட்டதோடு சரி: பெயர் வெளியிட விரும்பாத, சென்னையைச் சேர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டில் ஒரு பள்ளி வேன் விபத்தில் சிக்கியதில், பல குழந்தைகள் இறந்தனர். உடனே, மெட்ரிக் பள்ளி முதல்வர்களை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தினர். மாணவரை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர் பெயர், கைப்பேசி எண், அவரது முகவரி, வாகனத்தின் பதிவு எண், முறையாக பராமரிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறையின் தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,-பிட்னஸ் சர்ட்டிபிகேட்) பெறப்பட்டிருக்கிறதா என்பது உட்பட, பல்வேறு தகவல்களை பெற்று, பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், அந்த தகவல்கள், முறையாக பள்ளிகளில் பராமரிக்கப்படுகிறதா என்பதை, அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. அதைப்பற்றி, பள்ளி நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும், தங்கள் குழந்தை பாதுகாப்பான வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வருகிறதா என்பதை கண்காணிப்பதில்லை. இப்படி, ஒவ்வொருவரும், தங்களது பொறுப்புகளை சரிவர செய்யாததால் தான், மழலைகளின் மரணங்கள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (19)
thanigai vel - maduranthagam,இந்தியா
27-ஜூலை-201217:53:58 IST Report Abuse
thanigai vel These things only caused due to Mainly Bribery dancing in all over the places. The Only Solution for these problem will be a very severe punishment for all like , 5 to 10 years jail, voter&39s ID, Ration Card ,driving licence (all including 2 wheelers), cancelations, and no susp DIRECT DISMISS from all jobs in the whole family, No rail Reservations, some thing like giving social-economic punishment not only jail. to include family member&39s of the culprit.because they also are the reason bribing goes in and out . For example , a wife of an RTO wants her Husband to SMART by earning more money.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Naresh Kumar - Udumalpet,இந்தியா
27-ஜூலை-201217:11:21 IST Report Abuse
Naresh Kumar All people working in their concern departments must work sincerely and effectively ,so that no incidents happens also corruption must beabolished. Thanks to court for immediate action . Be happy make others to be happy .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
27-ஜூலை-201216:37:59 IST Report Abuse
Rangarajan Pg அரசு அதிகாரிகள் உண்மையிலேயே திறமை உள்ளவர்களாகவும் தாம் செய்யும் பணியில் முழு அளவு ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தால் ஏன் இதை போன்ற சோகங்கள் அடிக்கடி நிகழ போகிறது? ஆனால் இப்போதுள்ள அதிகாரிகள் சும்மா பெயருக்கு தான் அதிகாரிகள். அவர்கள் செய்யும் வேலை VIRTUALLY ZERO . அவர்களுடைய செயல்பாடு மிக மிக குறைவு. அறிவுத்திறன் குறைவு. வேலையில் ஆளுமை மிக மிக குறைவு. USING THEIR HEAD , மிக மிக குறைவு. எல்லாருமே லஞ்சம் கொடுத்து அல்லது சிபாரிசினால் வேலையில் சேர்ந்தவர்கள். அவர்கள் வேலையின் தரம் இப்படி தான் இருக்கும். திறமையான மனிதர்களை கண்டெடுத்து வேலையில் சேர்த்தால் அவர்களால் எல்லா துறைகளும் மேம்படும். ஆனால் மந்த புத்தி உடைய மனிதர்களை சிபாரிசினாலும் லஞ்சம் வாங்கி கொண்டும் வேலை செய்தால் எல்லா துறையுமே மந்தமாக தான் இருக்கும். பணம் கொடுத்து திறமையில்லாதவர்கள் கூட வேலையில் சேர்ந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காக செய்யாமல் அந்த துறையை பாழடித்து ஆகமொத்தம் LONG RUN இல் நாட்டையே குட்டிசுவராக்கிவிட்டார்கள். திறமையானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போய் விடுகிறார்கள். என்ன தான் செய்வது. அதுவுமில்லாமல் இந்த பள்ளிகள் யாராவது வந்து கட்டுபடுத்தினால் தான் ஒழுங்காக சட்டப்படி இருப்பார்களா என்ன? அவர்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு மற்றும் RULES & REGULATIONS இருக்காதா? எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்க கூடாது. அது சட்டம் மட்டுமே இயற்ற்றும் அந்த சட்டம் ஒழுங்காக பின்பற்றபடுகிறதா என்று பார்க்காது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nagesh Rao - Chennai,இந்தியா
27-ஜூலை-201213:34:00 IST Report Abuse
Nagesh Rao முதல் தவறு வாகனம் பெர்மிட் புதுபித்த வாகன ஆய்வு அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . சின்ன குழந்தைக்கு கூட தெரியும் RTO ஆபிசில் லஞ்சம் வாங்குவது. முதல் தவறு பஸ்சில் அவ்வளவு பெரிய ஓட்டையை மறைத்து வாகனத்தை பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வது இந்த ஆபத்திற்கு வித்து. இந்த விபத்திற்கு காரணமானவர்களை கடுமையான தண்டனை கொடுத்து மற்றவர்களுக்கு ஒரு இது ஒரு முன் உதாரண நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201203:17:42 IST Report Abuse
மதுரை விருமாண்டிபள்ளி நிர்வாகியின் குழந்தையையோ, பேரக் குழந்தையையோ பஸ் ஏற்றிக் கொல்லலாம்... பாவம் சாகக் கூடாது என்று நினைத்தால், அதை இந்த பெற்றோருக்கு தத்து கொடுத்து விட்டு, பள்ளி நிர்வாகியை கட்டாயம் பஸ் ஏற்றிக் கொல்லலாம்.. RTO ஆபீஸ், கல்வித் துறை அதிகாரிகளை உயிரோடு இந்த பஸ்ஸில் போட்டு எரித்து விடலாம்.. விருமாண்டி தீர்ப்பு இது தாண்டா.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nagaraj - Hyderabad,இந்தியா
27-ஜூலை-201211:18:30 IST Report Abuse
Nagaraj அரசு அதிகாரிகளை குறை சொல்லுவதை விட, பள்ளி நிர்வாகம் கண்டிப்புடன் இருந்தாலே போதும். பணவெறி பிடித்த சுயநலவாதிகள் எங்கே இதையெல்லாம் செய்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Malar - Chennai,இந்தியா
27-ஜூலை-201210:37:53 IST Report Abuse
Malar நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால் நெஞ்சம் பொறுக்குதிலையே :(
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
27-ஜூலை-201209:20:26 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN T.G.BALASUBRAMANIAN., Australia. அதிகாரிகள் என்பவர் புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகள் இல்லை. ஒவ்வொன்றையும் பிறர் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியவர்களில்லை. சொந்த அறிவோடு செயலாற்றுபவர்கள்தான் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாக வரவேண்டியது அவசியம். வெறும் வேலை செய்த காலத்தை மட்டும் வைத்து பதவி உயர்வு பெற்றால் தரம் குறையத்தான் செய்யும். அப்படி வந்தவர்கள் வேலையே செய்யாமல் அல்லது தெரிந்த அரை குறை அறிவோடு வேலை செய்து வருமானத்திற்காக மட்டுமே பதவியில் இருப்பவர்கள். அவர்களிடம் தரமான நேர்மையான வேலையை எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றது. இவர்களுக்கு தொழிற்சங்கம் ஒரு கேடு. வேலை தெரியாவிட்டாலும் தகுதி இல்லாவிட்டாலும் வேலையில் இருந்த காலத்தை மட்டுமே வைத்து பதவி உயர்வு தரவேண்டும் என்று நிர்பந்திப்பதன் மூலம் பெரிய தவறு இழைப்பது இந்த சங்கங்களின் தலையீடுகளால்தான். அரசு அலுவலகங்கள் வெகு அளவு தங்கள் திறமையை இழந்துவிட்டது.. அத்துடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் அலுவலகர்களின் திறமை குறைவிற்குக் காரணம். இவை அனைத்தும் எளிதில் தீர்க்கப்படகூடிய குறைகள் அல்ல. புரட்சியின் மூலம் மட்டுமே சரியாகும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rajan - kerala,இந்தியா
27-ஜூலை-201207:43:36 IST Report Abuse
rajan எல்லா பள்ளிகூடங்களும் கலேஜிகளும் இனி அரசு பஸ்ஸை தான் வாடகைக்கு அமர்த்த வேண்டும் என சட்டம் போடுங்கள். இவனுக காலேஜி நடத்தி அந்த வச்சு காசு பண்ணி பஸ் கம்பெனி தொடக்கி லஞ்ச மரம் வளர்த்து இப்படி அடுகிகிட்டே போகலாம். பணம் பாதளம் வரை பாயும் என்பதற்கு சான்று உயீர் பலிகள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ravisankar - bangalore,இந்தியா
27-ஜூலை-201211:13:48 IST Report Abuse
Ravisankarஅரசு பேருந்தா? ராஜன் இந்த சோகத்திலும் உங்களால் எப்படி இப்படி காமெடி செய்ய முடிகிறது? போன மாதம் அண்ணா மேம்பாலத்தில் விழுந்ததே அது என்ன கண்டிஷன்&39ல இருந்தது தெரியுமா? அரசு பேருந்தை பயன்படுத்தினால் ஓட்டுனரோடு சேர்ந்து அத்தனை குழந்தைகளும் சாலையில் விழவேண்டியதுதான்... ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sanghimangi - Mumbai,இந்தியா
27-ஜூலை-201214:18:27 IST Report Abuse
Sanghimangiஇது ஒரு மிக சிறந்த யோசனை... இப்படி செய்வதால் அரசுக்கும் வருமானம், அரசு பேருந்துகளின் பராமரிப்பும் சிறப்பாக இருக்கும்... இதன் மூலம் வரும் வருமானத்தில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஒரு பேருந்தை கூடுதலாக இயக்கவும் முடியும். சாலைகளில் bus pass வைத்து கொண்டு மக்கள் பயணிக்கும் பேருந்துகளில் ஏற சிறுவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஆகவே தங்களின் யோசனையை உடனே அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vel Murugan - Doha,கத்தார்
27-ஜூலை-201214:36:05 IST Report Abuse
Vel Muruganஅரசு பேருந்துகள் மட்டும் பராமரிக்கப்படுகின்றதா என்ன?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kaayalaan - Chennai,இந்தியா
27-ஜூலை-201215:18:51 IST Report Abuse
Kaayalaanராஜா..அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளே இப்பொழுது தள்ளாடிட்டுத்தான் இருக்கு.சமீபத்தில் அண்ணா மேம்பாலத்தில் நடந்த விபத்து நினைவிருக்கலாம். இவங்களை நம்பிலாம் சீக்கிரம் எதுவும் பண்ண முடியாது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajakumar - Selaiyur,இந்தியா
27-ஜூலை-201219:51:39 IST Report Abuse
Rajakumarராஜன் avargale தனியார் பள்ளிகள் அரசு ஏலம் விடும் பஸ் kalai வங்கி பயன் படுத்துகிறார்கள் , தெரியுமா உங்கள்ளுக்கு?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Chidambaram Am - chennai,இந்தியா
27-ஜூலை-201207:39:51 IST Report Abuse
Chidambaram Am If the appointed officials in Government Departments, realize their Duties and Responsibilities, for which they assume office, do the entrusted work CORRECTLY without aspiring for fringe benefits, then only such incidents shall be arrested totally.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vasu Gandhi - chennai,இந்தியா
27-ஜூலை-201207:23:39 IST Report Abuse
Vasu Gandhi இந்த நாடு குட்டி சுவராவது படிக்கதவர்களால் அல்ல. படித்த சுயநல லஞ்ச பேய் களான அரசு அதிகாரிகளாலும் உயர் மட்ட அரசியல்வாதிகளை கையில் வைத்து கொண்டு இந்த மரத்து போன சட்ட திட்டங்களை மதிக்காமல் நாட்டை ஆட்டி படைக்கும் உயர் மட்ட கொழுத்த பணக்கார பிசாசுகளால் தான். உளுத்து போன சட்டம். அதை வைத்து பிழைக்கும் கேடு கேட்ட கூட்டம். உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு. இயங்காத அரசியல் இயந்திரம். ஒழுக்கமில்லாத தலைவர்கள். கண்ணீர் விடுவது தலை எழுத்தானது.அரசன் முதல் கடைசி குடிமகன் வரை எல்லாம் கோணல். குழந்தை முகம் நெஞ்சை பிசைகிறது. இந்த கேடு கெட்ட நாட்டில் பிறந்ததை தவிர எந்த பாவமும் செய்யாத அந்த தெய்வ மகளின் ஆத்மா சாந்தி அடையட்டும். பெற்றோரின் துக்கத்தில் பங்கு கொண்டு இந்த சுயநல பிசாசுகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201203:30:07 IST Report Abuse
மதுரை விருமாண்டிஉங்கள் நல்ல எண்ணத்திற்கு உதவ எந்த இறைவனும் இறங்கி வர மாட்டான்... இவ்வளவு கரைகள் படிந்த ஒரு இடத்தில் அவன் கட்டாயம் வரமாட்டான்... He has empowered us all to do this job.. இயங்காத அரசு, பணம் தின்னிப் பிசாசுகளான அநீதிபதிகள், அரசுத் துறை அவலங்கள், காவல்துறை களங்கங்கள், அரசியல்வியாதிகள் - ஒரு நாட்டின் சட்ட நீதித் துறையின் தூண்கள் குஷ்டமும், க்ஷயரோகமும், புற்றுநோயும், எய்ட்ஸ் நோயும் ஒரு சேர வந்து கலங்கிக் போய் உள்ளது.. அதிக பட்சம் ஒரு லட்சம் பேரால், நூறு கோடி பேர் அதன் விளைவால் அல்லலும், அவதியும் படுகின்றனர்.. அந்த லட்சம் பாவிகளும் சுபிட்சமாக இருக்கிறார்கள்... ஒரு நாயால், பத்தாயிரம் உயிர்கள் அவதிப்பட வேண்டுமா ?? பாவத்தைப் பார்த்தால் பத்தாயிரம் பேர் சேருங்கள், ஒருத்தன் தலையைக் கொய்யுங்கள்.. இதை லட்சம் முறை செய்யுங்கள்... பாரத நாடு மீண்டும் புண்ணிய பூமியாகும்.. அப்புறம் கடவுள் இறங்கி வருவான்... தலை எழுத்து என்று கண்ணை மூடிக் கொண்டால், நாளை நம் தலை எழுத்தும் இப்படி பஸ்சுக்கு அடியில் தான் முடியும்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.