Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2012,02:04 IST
கருத்துகள் (12)
சென்னை:தமிழகத்தில் தொடரும் பள்ளி வாகன விபத்திற்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காமல், விபத்து நடந்த பின்னரே விழித்துக் கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை முடிச்சூர் அருகே, பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, 7, உடல் நசுங்கி பலியானாள். தமிழகத்தில், கடந்த மூன்றாண்டுகளில், 10க்கும் மேற்பட்ட பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதுபோன்று பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது மட்டுமே அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் விழித்துக் கொள்கின்றன; மற்ற நேரங்களில் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என, சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட், பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம்
இருப்பினும் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. அதேபோல், பள்ளி பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம் எனவும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பள்ளி வாகனத்திற்கு தகுதிச் சான்று அளிக்கும் அதிகாரிகள், அந்த வாகனத்தை முறையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவதில்லை என்பதை, மாணவி ஸ்ருதியின் இறப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மாணவி பயணம் செய்த பேருந்து, பயணத்திற்கு தகுதியானது என, கடந்த 15 நாட்களுக்கு முன் தான், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இயக்க ஊர்தி ஆய்வாளர் நிலை-1 ராஜசேகரன், தகுதிச் சான்று அளித்துள்ளார்.தகுதிச் சான்று புதுப்பிக்கும்போது, வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்க வேண்டும் என, நடைமுறை இருந்தும் அதை சரிவர அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், தொழில்நுட்பப் பணியாளர்களை நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதுபோன்று, நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்வது கூடாது என, அமைச்சு பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களேநியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இனி வரும் காலத்தில் நிர்வாகப் பணிகளில், தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது. மேலும், ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று புதுப்பிப்பு, வாகனப் பதிவு, வாகனத் தணிக்கை ஆகியவற்றை முறைப்படுத்தி, மோட்டார் வாகனச் சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகின்றனரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஒருவருக்கு நான்கு பதவியா?
விபத்துக்குள்ளான பள்ளி பேருந்திற்கு தகுதிச் சான்று வழங்கிய, தாம்பரம் போக்குவரத்து அலுவலகம், தெற்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் பன்னீர்செல்வம் என்ற அதிகாரியின்
Advertisement
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இணை போக்குவரத்து கமிஷனர் (வடக்கு சரகம்), துணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு), இணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு) மற்றும் இணை போக்குவரத்து கமிஷனர் (தெற்கு சரகம்) ஆகிய நான்கு பதவிகளை வகிக்கிறார்.அலுவலக அதிகார வரம்பு படி, இவருக்கு அயனாவரத்தில் உள்ள வடக்கு சரக இணை போக்குவரத்து கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், மூன்று பொறுப்புகளை உடன் வைத்திருப்பதால், தனக்குரிய பணியை கவனிக்காமல் நிர்வாகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், வாகனத் தணிக்கை போன்ற முக்கிய பணியை மேற்கொள்ளாமல் உள்ளார்என, அமைச்சுப் பணியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

விசாரணை அதிகாரிக்கு எதிர்ப்பு?
பேருந்து விபத்து குறித்து, விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக, துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது. உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் ராஜசேகரன், ஒரு தொழில்நுட்பப் பணியாளர். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து, தொழில்நுட்பப் பணியாளராக இருந்து பதவி உயர்வு பெற்ற துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ், விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது என, அமைச்சுப் பணியாளர்கள் கூறுகின்றனர்.விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான ஒரு குழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது, ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்திருப்பது சரியானது அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (12)
hariharan - chennai,இந்தியா
29-ஜூலை-201206:02:43 IST Report Abuse
hariharan நேற்று கல்வித்துறை இன்று போக்கு வரத்து துறை நம் ஊரில் ஒன்று மட்டும் நிச்சயம் கும்பகோணத்தில் கல்யாண மண்டபத்தில் தீ விபத்திற்கு தீர்ப்பு வந்தது போல இந்த வழக்கிற்கும் ஒரு நாலணா அபராதம் கட்டும்படி ஒரு தீர்ப்பு வரலாம் நம்நாட்டில் தீவிரவாதி பாராளுமன்றத்தில் குண்டு வைத்தாலும், தலைவர்களை குண்டுவைத்து கொன்றாலும், மும்பை போன்ற தாக்குதல் நடத்தினாலும் நீதி, விசாரணை, என்று சகல விதமான சுகங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர் என்றமுறையில் குற்றவாளிக்கு கொடுத்து 21 வருஷமாக பழக்கிவிட்டோம். சிறை தண்டனை என்பது என்ன? ஒருவர் தனிமையில் வாடி தன தவறை உணர்ந்து திருந்துவதற்காக கொண்டு வரப்பட்ட தண்டனை. நம்நாட்டில் கொலை செய்தவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம், குடும்பம் நடத்தலாம், பிள்ளைகள் பெற்றுகொள்ளலாம், படிக்கலாம் அரசு உத்யோகத்திகு கூட போகலாம். இங்கு கைதிகளுக்கு, குற்றவாளிகளுக்கு உள்ளல பாதுகாப்பும் உரிமையும் சாதாரண மக்களுக்கு இல்லை இன்று ஸ்ருதி மட்டும் அல்லா இதற்கு முன்பு பொது பேருந்துகளில் பாது காப்பு இல்லாததால் விபத்தே நடந்தது இல்லையா? இப்போது கூட ஒன்று சொல்வேன் இந்த வண்டிக்கு FC கொடுத்த பிரேக் இன்ஸ்பெக்டரை நாடு ரோடில் அடித்து கொன்றால் ஒழிய இது போல (விபத்துகள்?) நடந்து கொண்டு தான் இருக்கும். இதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது இன்று நான் சொல்வது கொடூரமாக இருக்கலாம் ஆனால் மக்கள் மற்ற விஷயங்களை போல இதை எடுத்து கொள்வார்கள் என்று ஆளுபவர்களும், மனித உரிமைபேசி குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் இயக்கங்களும் நினைத்தால் ஒருநாள் நான் நினைப்பது போல நடக்கும் அது சீக்கிரம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201204:32:28 IST Report Abuse
shanmugam suresh இதுக்கு ஒரே வழி, லஞ்சம் பெற்று அனுமதி கொடுக்கற அரசாங்க அதிகாரியை கைது செய்து கொலை பலி சுமத்துவதுதான், அவர் வேலையே இந்தமாதிரி நடக்காமல் தடுப்பதற்குத்தான் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Bala - NY,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201220:37:52 IST Report Abuse
Bala பொதுவாகவே மக்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை. என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்ற மனப்பான்மை உள்ளவர்கள் மிக மிக அதிகம். அவர்களால் சமுதாயம் சீரழிகிறது. சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதான் என்கிற எண்ணம் நம்மிடையே மறைந்துவிட்டது. நம்மிடத்தில் பணம் இருக்கிறது நாம் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்கிற எண்ணம் மக்களிடையே மேலோங்கி விட்டது. அரசாங்கமும் இந்த எண்ணத்தை வளர்ப்பதாகவே உள்ளது (அவர்களுக்கு ஒட்டு வங்கி போய்விடும் என்கிற கவலை). இதை மாற்றவேண்டும் நினைத்தால் முதலில் மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பிப்போமாக.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arp Peter - sivagangai ,இந்தியா
28-ஜூலை-201211:16:07 IST Report Abuse
Arp Peter ஒருவரே பல பொறுப்புகள்? வேடிக்கையாக உள்ளது? நாட்டில் வேலை இல்லாமல் எத்தனையோ பொறியாளர்கள்? என்னதான் நடக்கின்றது? லஞ்சம் ஊழல்னு கொள்ளையா சன்பதிக்கிறான் லஞ்சத்துக்கு உண்ணாவிரதம்? பே- ஜாரே ஒரு கூட்டம் அரசியல்ல குதிக்குதாம் அது லஞ்சமே (ஓட்டஒடசல்) இல்லாத இந்தியாவ உருவாக்கபோகுதாம்? இப்புடி இத்துப்போன அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருந்தா? இத்துப்போன பஸ் ஓட்டை மாதிரி எல்லாரையும் பெரிய பள்ளமா பார்த்து தல்லுரதுக்குள்ள நாம் விளித்துகொள்ளவேண்டும்? ஆட்டோ மொபைல் இன்சினியரிங் முடித்த நல்ல அனுபவம்மிக்க இளம் வயதினரை டிஇடி போன்ற குறில்-நெடில் சோடாபுட்டி கேள்விகள் இல்லாமல்? அந்த துறைக்கு தேவையான அறிவு + ஆற்றல் மிகுந்த தேர்வுனடத்தி திறமை மிக்கவர்களை தேர்வு செய்து. இதுபோன்ற(ஸ்ருதி-இன் இறப்பு) மற்றும் சாலை உயிர் பழிகளை தவிர்க்கலாம் நடக்குமா??? மற்றும் பள்ளிகளில் வாகன ஓட்டிகளின் உரிமம்+திறமை+முன்னனுபவம் அனைத்தையும் சோதித்து வாகனத்தை இயக்க? காசு குவிக்கும் கல்வி நிறுவனங்களும்?? 4 ட்ரிப் அடிக்கும் வாகன உரிமை முதலாளி-வேர்களும் சிந்தித்து ஓட்டுனரை தேர்தெடுத்தால், குழந்தைகளை மட்டுமின்றி போக்குவரத்தும் பாதுகாக்கப்படும்?? சில சாக்கடைகள் வாகனத்தை ஓட்டுவதை பார்த்தல் நடக்கவே பயம்தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Neethimaan - Madurai,இந்தியா
28-ஜூலை-201209:32:59 IST Report Abuse
Neethimaan முல்லை முல்லால் தான் எடுக்க வேண்டும். ஊழலை ஊழலால் தான் மறைக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vivekanandan - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-201208:18:53 IST Report Abuse
Vivekanandan Due to Negligence this incident has happen, a little innoccent child life has gone, there is no compensate for the child life, atleast in future we can save many child from such negligence, Parents has to sue all the related with maximum of 10 Crores each of the concerns departments, Parents Association (Entire Tamilnadu) has to pass resolution and forward to High Court & Supreme Court. Parents don&39t be negligence in your part atleast now, do it for the sake of the child who lost her life.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Antony Jerome - chennai,இந்தியா
28-ஜூலை-201211:38:31 IST Report Abuse
Antony Jeromeall those who are involed in this case should given strick punishment not by putting them in jail but should be removed for Govt.Services with out any benfits. alltheir benfits should be given to the child&39s parents&39by doing like this others will have a fear in them and will do their duty perfectly well . we request the union personal not come forward in this matter to support like this people the life of the child is most valued then any esle....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Bala - NY,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201220:08:02 IST Report Abuse
Balaநீங்கள் இருவரும் உங்கள் ஆங்கிலப் புலமையை வேறு இடத்தில் காட்டலாமே? உங்கள் கருத்தை தாய் மொழியில் பதிவு செய்யுங்கள்........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
hariharan - chennai,இந்தியா
29-ஜூலை-201206:07:00 IST Report Abuse
hariharan இதில் மொழி எங்கிருந்து வந்தது? நாடு ரோடில் விழுந்து இறந்த குழந்தையை போல நாடு ரோட்டில் சினிமாவில் வருவது போல பஸ்ஸில் கட்டி இழுத்து பிரேக் இன்ஸ்பெக்டரை கொன்றால் தான் இது போல விபத்துகள் நடக்காது அதை கூறுவதை விட்டுவிட்டு வேலையைவிட்டு தூக்கு பென்சயொனை நிறுத்து என்றெல்லாம் பௌடர் போட்டு இவரை தப்பிக்க வழி சொல்பவர்களை தான் குற்றம் சொல்வேன் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Devil - Chennai,இந்தியா
28-ஜூலை-201208:18:42 IST Report Abuse
Devil கடைசியாக அதிகாரிகள் ஏந்தும் ஆயுதம் "நேரமின்மை" + "ஆட்களின்மை". எல்லா "மக்கள்" தொடர்பு உள்ள பணிகளையும் முதலில் 24 மணி நேர சேவையாக மாற்ற வேண்டும். அனைத்து பாக்கி உள்ள கோப்புகளையும் விரைவாக முடிக்க ஆவன செய்ய வேண்டும். வெளி நாடுகளில் 8 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் நாட்டிற்கு போதுமானது. நம் மக்கள் தொகைக்கு, நாமே நமக்கு 24 மணி நேர சேவை செய்துகொண்டால் மட்டுமே, நம் வாழ்கை சீர்படும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaduvooraan - Chennai ,இந்தியா
28-ஜூலை-201207:30:13 IST Report Abuse
Vaduvooraan ஊழலின் ஊற்றுக் கண் இந்த போக்குவரத்துத் துறை உரிமங்கள் வழங்கும் முறையே கேலிக்குரியது அரசு தரும் சம்பளத்தை எதோ பயணப் படி போல நினைக்கும் இந்த ஆய்வாளர்கள் லஞ்சத்தை மட்டுமே நம்பி பிழைப்பவர்கள் எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் அடிப்படை தகவல் தரவே ஆட்கள் இல்லாத நிலையில் பொது மக்கள் வெளியே மலிந்து கிடக்கும் தரகர்களிடம் சென்று மாட்டிக் கொள்வது தவிர்க்க முடியாதது இந்தத் துறையின் இணைய தளத்தில் கூட புதிய உரிமங்களுக்கோ அல்லது புதுப்பிபதற்கோ அல்லது மற்ற சேவைகளுக்கு தேவையான ஆவணங்கள், படிவங்கள் பற்றி சரி வர தெரிவிக்கப் படவில்லை எனபது இன்னொரு வேடிக்கை (புதிய ஆட்சி வந்த பிறகு கூட ஒரு ஆறு மாத காலம் சென்னை க.க நகரில் உள்ள வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தின் இணைய தளத்தில் எப்போதோ திருநெல்வேலிக்கு மாற்றல் ஆகிப் போய் விட்டஅதிகாரியின் பெயர் அப்படியே மாற்றப் படாமல் இருந்ததுடன் , தினகரன் பத்திரிகையில் மூன்று வருடம் முன்பு அவரைப் பாராட்டி வந்த செய்தியும் முதல் பக்கத்திலேயே இருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?) தவிர படிவங்கள் அச்சிடப் பட்டு அரசினாலேயே போக்கு வரத்து அலுவலகங்களில் விற்கப் படுவது அவசியம். தகவலும் இல்லாது சேவைக்கு உரிய படிவங்களும் இல்லாத நிலையில் தரகர்கள் பின்னால் ஓடுவதைத் தவிர மக்களுக்கு என்ன வழி? உரிமம் புதுப்பிக்க தாக்கல் செய்யப் படும் ஒரு மருத்துவ சான்றிதழ் இன்னொரு கேலிக் கூத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாயிலில் ஒரு மொபெட் வண்டியில் ரப்பர் ஸ்டாம்ப் பேட் சகிதம் ஒரு பேர்வழி நின்றுகொண்டு, உங்கள் கண்பார்வை, உடல் நிலை பற்றி படிவத்தில் கேட்கப் பட்டிருக்கும் முக்கியமான் கேள்விகளுக்கு சர சர வென்று பச்சை இங்கில டிக் அடித்து விட்டு ரப்பர் ஸ்டாம்ப் அடித்து கொடுத்து நாற்பது ரூபாய் வாங்கிக் கொள்வார் அது போலத் தான் ஓட்டுனர் உரிமம் பெற பயிற்சி வழங்குவதாகக் கூறும் டிரைவிங் பள்ளிகளும் சட்ட திட்டங்கள் தளர்த்தப் பட்டால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இல்லாத மக்கள் கடுமையாக்கப் பட்டால் ஊழல் பெருகும் ஒரே வழி உரிமம் பெறுவதை சுலபமாக்கி விட்டு, போக்குவரத்து மீறல்கள், விபத்துகள் இவற்றுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சற்று நிலைமை சீரடையலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-201204:53:02 IST Report Abuse
Kasimani Baskaran பணம் கொழிக்கும் இடங்களில் எல்லாம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் ஆதிக்கம் செலுத்துவது ஒன்றும் புதிது அல்ல. இப்படிப்பட்ட பணி இடங்களுக்கு மாற்றுதல் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.