ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனுக்காக மலர் தொட்டிகளில் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆண்டு தோறும் கோடை சீசனில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். தோட்டக்கலை துறையினரும், சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் ஏராளமான வகை பூக்களை கொண்டு மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம்.ஊட்டியில், இரண்டாவது சீசன் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இதில், ஒன்றரை லட்சம் மலர்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக, தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 250 வகை மலர்கள், 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.