Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012,00:11 IST
கருத்துகள் (11)
தனியார் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிமுறைகளை வகுப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில், தமிழகம் முழுவதும், விதியே இல்லாமல் கண்டபடி இயக்கப்படும், "ஷேர் ஆட்டோ'க்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெட்ரோல், வாகன காஸ் விலை உயர்வின் காரணமாக, ஆட்டோ கட்டணங்கள் சரமாரியாக உயர்ந்து வந்த நிலையில் தான், ஷேர் ஆட்டோக்கள் தமிழகத்தில் அறிமுகமாயின. கடந்த, ஏப்ரல் மாதம் நிலவரப்படி, தமிழக சாலைகளில், பயணிக்கும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை, 1.54 கோடியைத் தாண்டியுள்ளது.
கட்டணம்: இதில், ஆட்டோக்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதில், ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கையும், கணிசமான அளவு உள்ளது. இது தவிர, டாடா மாஜிக், மகேந்திரா மேக்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. "ஷேர்' ஆட்டோக்கள், டாடா மேஜிக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகளிடம், பயண தூரத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பஸ் டிக்கெட் கட்டணத்தை விட சற்றே அதிகம். ஆனால், ஷேர் ஆட்டோக்களை அதிகளவில்

அறிமுகப்படுத்தியுள்ள, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ஆட்டோக்களில், சாதாரண ஆட்டோக்களை போல் மூன்று பேர் தான் பயணிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்த ஆட்டோக்களில் உள்புறம் ஆறு பேர், டிரைவரின் இருபுறமும், இரண்டு பேர் என டிரைவருடன் சேர்த்து, ஒன்பது பேர் பயணிக்கின்றனர். இதனால், இது போன்ற ஷேர் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகும் போது, உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் போது, திருப்பங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் உண்டு. குழந்தைகள்: அதிக ஆட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பதாலும், டீசலில் செலுத்தப்படுவதாலும், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில், தங்களிடம் இருந்த சாதாரண ஆட்டோக்களைவிற்பனை செய்துவிட்டு, "ஷேர்' ஆட்டோக்களை வாங்கி ஓட்டி வருகின்றனர். இவர்கள், தங்கள் பகுதியில் இருந்து, பள்ளி மாணவர்களை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் பணியை மேற்கொள்கின்றனர். இதில், சாதாரணமாக பயணிகள் எட்டு பேரை ஏற்றினால், பள்ளிக் குழந்தைகளை, 13 பேர் வரை ஏற்றி, புளி மூட்டை போல் அடைத்துச் செல்கின்றனர். சாதாரண ஆட்டோக்களிலும் இது போன்று, பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏற்றிச்

Advertisement
செல்வதும் உண்டு. ஷேர் ஆட்டோக்களில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, குறுகலான சாலைகளில் கூட தங்கள் இஷ்டத்திற்கு ஓட்டுகின்றனர். சென்னையில் மட்டும் தற்போது, 66 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில், 30லிருந்து 35 சதவீதம் ஷேர் ஆட்டோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஷேர் ஆட்டோக் களின் இந்த அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதம்: சென்னை சேலையூரில், பள்ளி பஸ் விபத்தில் குழந்தை பலியான சம்பவத்திற்கு பின்பு தான், தமிழக அரசு விழித்துக் கொண்டுள்ளது.
இப்போது, அதிக பயணிககள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை கூட விடாமல், பிடித்து அபராதம் விதித்து, டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதை பார்க்க முடிகிறது. பள்ளி பஸ்சில் குழந்தை பலியான விவகாரத்தில், தலையிட்ட ஐகோர்ட், பள்ளி பஸ்களுக்கு புதிய சட்ட விதிகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதே போல், அடாவடியாக இயக்கப்பட்டு வரும், இந்த ஷேர் ஆட்டோக்களுக்கும் தனியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு. விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை என்ற நிலை மாறி, வருமுன் காக்கும் நடவடிக்கையாக இதை செய்ய வேண்டும் என்று, அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.- நமது நிருபர் -



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
Dhana Sekar - Chennai,இந்தியா
08-ஆக-201210:10:33 IST Report Abuse
Dhana Sekar மூன்று பேருக்கு மேல் ஏற்ற கூடாது என்ற விதியை தளர்த்தி 5 பேர் வரை ஏற்ற அனுமதிக்கலாம். பேருந்து நிருத்தங்களிளிருந்து சற்று தொலைவில் (ஷேர்) ஆடோக்களுக்கென தனியாக இடம் ஒதுக்கலாம். இதன் பிறகும் அதிக ஆட்களை ஏற்றினாலோ கண்ட இடங்களில் நிறுத்தினாலோ தற்காலிகமாக ஒரு மாதம் வரை பெர்மிட்டை றது செய்யலாம்.இன்றைய நிலையில் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கவும் முடியாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan - Vietnam,வியட்னாம்
29-ஜூலை-201216:28:29 IST Report Abuse
Nallavan அது வந்தாலும் ஒன்னும் பெர்சுசா நடக்க போவது இல்ல . சிட்டி ல ஓடுற பாதி ஆட்டோ க்களும் , ஷேர் ஆடோக்களும் போலீஸ் காரங்க தான் முதலாளி ங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nathan uthayan - Paris,பிரான்ஸ்
29-ஜூலை-201214:42:04 IST Report Abuse
nathan uthayan ஒவ்வொரு முறையும் ஒரு சில உயிகளை பலி கொடுத்து தான், அரசாங்கம் புத்தி கொள்முதல் செய்வது அரசின் கையாளாகத்தன்மையை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இன்னும் எத்தனை மொட்டுக்களை அவிழப்போகிறதோ இந்த அலட்சிய அரசாங்கங்களின் விபரீத போக்கால்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201212:13:58 IST Report Abuse
Kasimani Baskaran அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்துக்கு எத்தனை ஆட்டோக்கள் வருகின்றன என்று காவல்த்துறை கண்டுபிடித்து சொல்ல வேண்டும். கண்டிப்பாக நூறு பேருக்கு அதிகமாக இருக்காது. சரியாக மீட்டர் ஓடுகிற ஆட்டோ ஒரு அதிசயமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
29-ஜூலை-201212:05:18 IST Report Abuse
குடியானவன்-Ryot ஷேர் ஆட்டோவின் ஒரு நாள் வாடகை குறைந்தபச்சம் ஈரோட்டில் 800௦௦ to 1000 கோவையில் 1000 to 1300 ஷேர் ஆட்டோ டிரைவர்கள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2200௦ சம்பாதித்தால் தான் அவர்கள் இந்த வாடகை கொடுக்கமுடியும் அதனால் தான் அவர்கள் அதிகம் பயணிகளை ஏற்றிகொண்டு செல்கிறார்கள். இதில் மாதம் RTOவுக்கு 2000 policeக்கு 1000 போக ஒரு ஆட்டோ முதலாளி மாதம் ஒன்றுக்கு குறைந்தபச்சம் 18000 முதல் 25000 வரை வருமானம் வருகிறது இதற்கு வருமான வரி கிடையாது.... இதை எல்லாம் அரசு கவனத்தில் எடுத்து கொண்டு செயல் படுத்தினாலே மது இல்லா தமிழகத்தை அடைய முடியும் என்பது தமிழக அரசுக்கு எனது தாழ்வான கோரிக்கை.... ௦௦௦
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.R.MAHEND - Madurai,இந்தியா
29-ஜூலை-201211:46:36 IST Report Abuse
T.R.MAHEND Government has to take severe action on "Share Auto" especially in Town area all over the state
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vithuran - Chennai,இந்தியா
29-ஜூலை-201211:16:25 IST Report Abuse
vithuran பெருசா ஒன்னும் கட்டுபடுத்த வேண்டியதில்ல கண்ட இடத்தில நிறுத்தமா போக்குவரத்துக்கு இடைச்சல் இல்லாம நிறுத்த முதல்ல சொல்லி கொடுங்க முன்னாடி ட்ராபிக் இருந்தும் தேவையில்லாமல் ஹாரன் அடிக்காம இருக்க சொல்லி கொடுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sathish S - salem,இந்தியா
29-ஜூலை-201211:14:15 IST Report Abuse
Sathish S விபத்திற்கு பின் விழிக்கும்.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
S.Sankar Narayanan - Madurai,இந்தியா
29-ஜூலை-201209:59:29 IST Report Abuse
S.Sankar Narayanan ஷேர் ஆட்டோவை அந்த ஆண்டவன் வந்தாலும் கட்டுபடுத்த முடியாது கையை மீறி விட்டது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
gmohan - chennai,இந்தியா
29-ஜூலை-201209:55:20 IST Report Abuse
gmohan ஷேர் ஆட்டோ பினாமியாக ஓட்டுவது யார்? அதை முதலில் கண்டு பிடித்தாலே சரி - இல்லையென்றால், இதைப்போல சரக்கு வண்டிகளை பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட் க்கு உபயோகிக்க முடியுமா ? இதை ஆர் டி ஒ எப்படி அனுமதிக்கிறார்கள்? எப்படி அனுமதி கொடுத்தார்கள்? முதலில் ஷேர் ஆட்டோ மனித போக்கு வரத்துக்கு தடை விதிக்க வேணடும். இதெல்லாம் ஒரு நாடகம், இரண்டு நாட்களுக்கு பிறகு இவை எல்லாம் மறக்கப்படும், தட் இஸ் ஆல்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.